செருப்பு அணிந்து செல்வாயா

செருப்பு இல்லாத
உந்தன்பாதம்
சிற்பம் இல்லாத கோவில்
போன்று
காட்சி அளிக்கிறது அன்பே ....

செருப்பு உந்தன்
பாதத்திற்கு
சிறப்பு அம்சமாகும்.....

செருப்பு
உந்தன் பாதத்திற்கு
சிம்மாசனாகும்........

கல்லும் முள்ளும்
நான் முத்தமிடவேண்டிய
உந்தன் பாதத்தை

கடித்து காயப்படுத்திவிடும்
என்று எனக்கு எந்நேரமும்
பயமாக இருக்கிறது அன்பே .....

எனக்கு மட்டும்
சொந்தமானவளே
எங்கே சென்றாலும்
மறக்காமல்

செருப்பு அணிந்து
செல்வாயா
அன்பே நீ எனக்காய் ...........

எழுதியவர் : (4-Aug-18, 5:01 pm)
சேர்த்தது : பேரரசன்
பார்வை : 135

மேலே