இவளின் காதல்

உன் அருகில் இருக்கும்
ஓர் நொடிக்காக,
பல யுகங்கள் இவளும்
காத்திருந்தாள்

இவள் விழி பார்த்து,
ஓராயிரம் கதைகள் நீ பேச,
சிறிதும் இமைக்காமல்
தலையாட்டி கேட்டிருந்தாள்..

விரல்கள் இறுக கோர்த்து,
முடிவே இல்லா பாதையில்,
உன்னோடு பயணிக்கவே,
ஒத்திகைகள் பார்த்திருந்தாள்..

உன் இதழ் பூத்திடும்,
சிறு புன்னகைக்காக,
இரவெல்லாம் உறங்காது
தவமிருந்தாள்..

உன்னை மட்டும் நேசித்தவள்..!
உன் காதல் ஒன்றே யாசித்தவள்..!
விழி மூடும் முன்னே,
காதல் சொல்லும்
நாளொன்று பாரடா..!!

எழுதியவர் : (6-Aug-18, 7:47 pm)
Tanglish : ivalin kaadhal
பார்வை : 225

மேலே