தோழியானவள்
யாழினியத்தோழி
கண்ணாடி கவசக் கண்ணோடு
மடியில் பேரப் பெண்ணோடு
தன்னாட தாங்கும் கோலோடு
கடியில் சிக்கும் பல்லோடு
நேரம் பழைய சக்கரமாய்
காலம் நிரைந்த காகிதமாய்
தேகம் சுரித்த கம்பளமாய்
ஞாலம் புரிந்த சூத்தரமாய்
இன்பம் துன்பம் சுவைத்தவளே
என்பும் உரிவேன் உறைத்தவளே
தண்ணீர் ருசியாய் சமைப்பவளே
கண்ணீர் கண்டால் தவிப்பவளே
பொய்யும் விழிகள் கதகதப்பில்
மெய்யும் தோல்வி என்னிடத்தில்
வையம் எங்கோ உன்இருப்பில்
ஐயம் கொல்லும் ஓருயிர்....
ச.ஜார்ஜ்