மலர்களை போல் சிரிப்போம்
மலர் மாலையில்
சிரிக்கும் பூக்கள்
மலர் வளையத்தில்
அழுவதில்லை
மலர்களுக்கு
சோகங்கள் இல்லை
பூவுக்கு
தெரிந்ததெல்லாம்
சிரிப்பு ஒன்றுதான்
சிரித்து மலர்ந்து
உதிர்ந்தும் சிரித்து
சிரித்தே வாழும்
இறைவனின்
படைப்பு
பூ ஒன்றுதான்
பூ போல சிரிப்போம்
புன்னகையுடன்
வாழ்வோம்
-----கவின் சாரலன்