நிவாரணம்
மௌனத்தின் மரநிழலில்
மரணத்தின் மாதிரியில்
கண்மூடி நான் கிடந்தேன்
மண்மீது வான் பார்த்து!
மல்லிகையின் வாசனையில்
மங்கையவள் கடந்திட்டாள்...!
நிலநடுக்கம், நீர்வீழ்ச்சி,
காட்டாற்று வெள்ளமும்,
ஒருசேர வந்ததுபோல்
என்மனதில் ஓர் உணர்ச்சி..!
பாதிப்பு கடுமைதான்
நிவாரணம் கிடைத்திடுமோ...?