ரட்சாபந்தன்

ரத்த பாசத்திற்கு ஏங்கினேன்
கூடப் பிறந்த சகோதரி
எனக்கிலேயே என்று -அப்போது
நீ வந்தாய் , உன்நட்பில்
நனைந்தேன் நான்
உன்னில் நான் ஏங்கிய
சகோதரியைக் கண்டுகொண்டேன்
சகோதரியே இதோ நான்
உனக்கு உன் பிறவா சகோதரனாய்
கையில் கட்டும் /ரட்சாபந்தன்'
உயிருள்ளவரை உனக்கு நான்
உன் சகோதரனாய் இருந்து
சகோதர நட்பில் உன்னை திளைக்கவைப்பேன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (25-Aug-18, 6:37 am)
பார்வை : 151

மேலே