காந்தியத்தின் அவசியம்

இரு நூறாண்டாய் இருளிலும் தளராது ;
பெருந் திரள் கண்டும் துவளாது ;
இரவு பகலறியாது ; வன்மையும் காட்டாது ;
அகிம்சைக்கு துணையாகி; அண்ணலின் வழியாகி ;
களமின்றி இரத்தக் களறியீந்து அறத்தால்
வீரத்தால் அடைந்த வெற்றி ! என்றும்
பசுமையாய் பொங்கியப் பாரதத்தி லின்றோ
பசியும் பிணியும் தலை விரித்தாட !
ஊழலும் லஞ்சமும் நாடெங்கும் உலவ
உதவாக் கரங்களில் உதவும் மந்திரக்கோல் !
இச்சைக்கு இறையாகி பலர் வாழ்வின்
பிச்சைக்குத் துணையாகி என்றும் கேட்பாறற்று
ஏக்கம் ஏங்கும் மக்கள் நாட்டில்
தூக்கம் என்பதே துக்கமானது ஏனோ?
உரிமையற்ற ஊழல் நாட்டில் என்றும்
அகிம்சைக்கு வித்தான காந்தியம் அவசியமே !
கானல் நீராய் கலங்கி நிற்கும்
கயவும் அறியா மக்கள் வாழ்வில் !
ஆனந்த ஜோதியாய் கயவர்களை அழிக்கும்
ஆயுதமாய்த் தோன்றும் காந்தியம் அவசியமே !
– அறவழி ஏற்க்கும் அடியனாய்
மா.சங்கர்