துரோகம்

அது அத்தனை எளிதல்லவே...

அன்றொருநாள் உனை நம்பிக்கையினால் அரவணைத்த கரங்களை வெட்டி எறிந்திருக்கிறாய்..
உனை அன்பினால் நிரப்பிய இதயத்தினை போட்டுடைத்திருக்கிறாய்..
அதன்பின்பு,
உன் பிம்பத்தை தகர்ப்பதென்பதும்,
உன் நினைவுகளை தவிர்ப்பதென்பதும் அவருக்கு எத்தனை கடினமாக இருந்திருக்க கூடும்..
அசாதாரண மனநிலையை கடக்கவியலாது மரணத்தின் கரம் பற்ற முயன்றிருப்பார்..
இத்தனை வலிகளுக்கும், பக்குவத்திற்கும் பின்னரும் உனை மீண்டும் ஏற்றுக்கொள்வதென்பது சாத்தியமே இல்லை..
இன்று உனக்கான புறக்கணிப்பை அவர் முன்நிலைப்படுத்தியதின் காரணியும் நீ தான்...
நீ மட்டும் தான்...
துரோகத்தின் வாடையை நுகர்தலென்பது அத்தனை எளிதல்லவே...

எழுதியவர் : சிவரஞ்சனி பிரசாந்த் (29-Aug-18, 11:37 am)
Tanglish : throgam
பார்வை : 446

மேலே