காதலானவன்

நிழல் தேடி சென்றிடும் உலகினில்,
நீயோ,
உண்மை தேடி அலைகிறாய்..!!
எதையோ எதிர்பார்ப்போர் மத்தியில்,
எதையும் பொருட்படுத்தாது திரிகிறாய்..!!
யாரோ நீ என உன்னை தேடுகிறாய்..
உன்னை யாரென என்னிடம் கேட்கிறாய்..!!

இயந்திர தனமாய் இயங்கிடும் உலகில்,
நீ "இயற்கையானவன்"..!!
மாயைகள் நிறைந்த உலகினில்
நீ "வினோதமானவன்"..!!
மாறிவரும் மனிதர்கள் மத்தியில்,
நீ "மாறிலியானவன்"..!!
அடையாளம் தேடுவோர் ஆயிரம் இருக்க,
நீ "தனித்துவமானவன்"..!!
இவளுக்கென யாருமில்லை என்று நினைத்த வேளையில் "யாதுமாகியவன்"..
தனிமை விரும்பிய இவளின் கண்கள் தேடும் "தேடலானவன்"..!!
காதல் இதுவென உரைக்காமல் உணர்த்தி,
இவள் காதலின் "காதலானவன்"..

எழுதியவர் : பொருள் செல்வி சிவசங்கர் (30-Aug-18, 7:42 pm)
பார்வை : 127

மேலே