மாயக்காரி மந்திரகாரி

அவள் பெயரின் முதல் எழுத்தை கேட்டாலே,
இதயம் துடித்திடும் இருமுறை.
அவள் பேசும் ஒலியை கேட்டாலை,
மனம் மயங்கும் பல முறை.
அவள் அருகே வந்து நின்றாலும்,
ஆன்மா உணருகிறது தன் பிறப்பை.
என்ன செய்தாலோ இந்த மாயக்காரி,
அவனை விட்டு சென்றும்,
அவன் மனதை இன்னமும் ஆட்டுவிக்கும்
மந்திரக்காரி!

எழுதியவர் : கி. பார்த்தசாரதி (6-Sep-18, 1:02 am)
சேர்த்தது : பார்த்தசாரதி கி.
பார்வை : 1958

மேலே