பார்த்தசாரதி கி. - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : பார்த்தசாரதி கி. |
இடம் | : திருப்பரங்குன்றம், மதுரை |
பிறந்த தேதி | : 09-Apr-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 1010 |
புள்ளி | : 41 |
வணக்கம்!
அவன் வாலிபம் செடியாக வளர்ந்து,
அவன் ஆசை மொட்டாகி,
அவள் சிரிப்பில் பூ பூத்து,
அவள் விழி வண்டுகள் ரீங்காரம் இட,
அவள் மௌனம் காயாக காய்க்க,
இருவர் உள்ளம் காதல் கனியாய் இனித்திட,
கல்யாணத்தில் காதல் கனிகள் களித்திட,
இல்லறத்தில் கனிகள் வெம்பி வெதும்பிட,
இனித்த கனியும் புளித்தது,
காதல் திருமண வாழ்விலே.........
எதிர்பார்க்காததது தனிமை,
எதிர்கொள்ளாததது தனிமை,
எளிமை ஆக்குவது தனிமை,
ஏற்றம் கொள்ள வைப்பது தனிமை,
உறவு தேடாததது தனிமை,
ஓய்வறியாதது தனிமை,
கற்பனை ஊற்றாய் தனிமை,
கட்டுப்பாடாததது தனிமை,
துணை நாடாததது தனிமை,
மனதுடன் உறவாடுவது தனிமை,
தன்னிறைவு கொள்வது தனிமை,
தற்பெருமை இல்லாததது தனிமை,
தனிமையே கொடுமை என்றாலும்,
மனசாட்சிக்கு என்றும் இனிமையே!
அவள் பெயரின் முதல் எழுத்தை கேட்டாலே,
இதயம் துடித்திடும் இருமுறை.
அவள் பேசும் ஒலியை கேட்டாலை,
மனம் மயங்கும் பல முறை.
அவள் அருகே வந்து நின்றாலும்,
ஆன்மா உணருகிறது தன் பிறப்பை.
என்ன செய்தாலோ இந்த மாயக்காரி,
அவனை விட்டு சென்றும்,
அவன் மனதை இன்னமும் ஆட்டுவிக்கும்
மந்திரக்காரி!
எதிர்ப்பார்த்தவைகள்
கிடைக்காத போது,
ஏமாந்த கொடுமைகளை,
அனுபவங்களாய்
மனசாட்சி
உணர்த்த தவறுவதில்லை.
என்னை ஏற்பது போல
ஒரு பார்வை பார்க்கிறாய்
அந்தப் பார்வையில்
புதிதாக பிறக்கிறேன்
சிறு குழந்தையாக .....
என்னை மறுப்பது போல்
மறு பார்வை பார்க்கிறாய்
அந்தப் பார்வையில்
புரியாமல் இறக்கிறேன்
ஒரு புழுதியாக ....
நீ சிரிப்பது போல
முகம் காட்டினாய்
அந்தப் புன்னகையில்
என் ஆண்மை
பூப்பெய்தியது ....
நீ முறைப்பது போல
முகம் நீட்டினாய்
அந்த பாவத்தில்
என் ஆசையின்
மலர் கருகுகிறது ....
நீ பிடித்தது போல
எனைப் பார்க்கிறாய்
ஒரு பார்வை
எனக்குள் புதிதாக
சிட்டுக்குருவிகள் பறக்கின்றன ...
நீ பிடிக்காதது போல
விழி தாழ்த்துகிறாய்
மறு நொடி
சின்னச் சிட்டுக்குருவிகளின்
உன் கண்கள்
கட்டளைகள்
தருகின்றது
என் இதயம்
கட்டுப்பட்டு
நடக்கின்றது
துரத்திப்
போகும்
காற்றில்
புன்னகை
அச்சுக்கள்
பூக்களின்
அரசாட்சி
கட்சிக் காரி
போல் நீயும்
எதிர்பாராத
வேளையில்
கவிதைக்கு
கண்ணீரை
தருகின்றாய்
ஓவியன் கூட
பூக்கள் முகம்
கேட்டால்
அவள் முகம்
காட்டி விட்டு
சாதனைகள்
புரிகின்றான்
மனம் எனும்
சாலையில்
காதல் எனும்
ஒரு பேருந்து
நித்தம் என்
மேல் மோதி
கவிதைகள்
தருகின்றது
கடல் அலை
உன் காலை
முத்தமிட்ட
மயக்கத்தில்
புகழ் பெற்ற
கவிஞனின்
புத்தகத்தை
திருடுகிறது
கடவுளை தேடும் கண்களே
இதோ உங்கள் கடவுள்.!!
அண்டத்தை ஆளும் ஈசன்
அனாதையாக கிடக்கிறார்.!!
கோள்களை படைத்த பகவான்
கோணிப்பையில் துயில் கொள்கிறார்.!!
ஈசன் பாதம் தொட ஏங்கும்
பக்தர்களே அவரை முழுதாக
தொட்டு தூக்க மனம் இல்லையா.??
விண்ணைத்தொடும் கோவில்கள்
இருக்கையிலே வீதியில்
வீற்றிருக்கிறாரே.!!
தங்ககாசுகள் உண்டியலில்
புரளுகையிலே சில்லறைகாசுக்கு
திருவோடு ஏந்துகிறாரே.!!
தூங்கிகொண்டிருக்கும் கடவுளை
கொஞ்சம் தட்டி எழுப்புங்கள்
காரணம் யாதுவென கேளுங்கள்.!!
பதில் இதுவாகவும் இருக்கலாம்.?
-திருவிளையாடல்
ஒரு முறை தான்
நினைத்தேன் - பல
நினைவிலே நிழலாய்
பின் ஊழள்கின்றேன்
அவளை பார்க்க முடிந்தும்,
அவளை உணர முடியவில்லை ,
அவளிடம் பேச நினைத்தும்,
என் உதடுகளை அசைக்க இயலவில்லை,
அவளை அழைக்க எண்ணியும்
என் கைகள் எழவில்லை,
ஆனால், என் நினைவில் மட்டும்
இருந்து என்னை ஆட்டுவிக்கிறாள்.
என்னவென்று எழுந்தால்!
என் தூக்கத்தில் கனவாக வந்தவள்,
என் காதல் ஏக்கத்தின் விழைவாய்,
தூக்கம் நிறைந்த என் கண்களை
கண்ணீரால் நிறைத்து கனவாக சென்றாள்.
நண்பர்கள் (17)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

யாழினி வளன்
நாகர்கோயில் /சார்லட்

வாசு
தமிழ்நாடு

பார்த்திப மணி
கோவை
