பெண்மொழியாள்

இன்மொழியாள்
வாய்மொழிகள்
பொன்மொழிகளென
என் செவிகளில் ஒளித்திடுதே!-அவள்
செம்மொழி என் செவிவழி
வேதமொழி என்றாகிடுதே...
மௌனமொழியால்
கொல்லத்துடிக்கும்
அவள் காதல் மொழி
என்னை வென்றிடுதே!
பண்மொழி கவிதைகள் யாவும்-அவள்
கண்கள் வழி தோன்றிடுதே!
பைந்தமிழ்மொழியின்
பல்சுவையும்
பைங்கிளியின் உடல்மொழி சொல்லிடுதே..
இன்பமொழிதனை -அவள்  இமைக்கானொடிகள்
உயிரணுக்கள் வழி உணர்த்திடுதே...
எழில் மொழியே என் தேன்மொழியே உன்னை
என் தாய்மொழியாய்  மதிக்கின் றேன்...
சேரன் வில்மொழியே
என் உயிர்மொழியே
நானும் உன்னை
காதலிக்கின்றேன்!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (6-Sep-18, 7:34 am)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
பார்வை : 129

மேலே