ஆயுள் வரம் கூடுமடி

நீங்காத நினைவுகளை
நித்தம் நானும் சுமக்கின்றேன்..
நீண்ட இந்த இடைவெளியை
உடைத்திடவே தவிக்கின்றேன்...!

விடியல் நோக்கி கரையும் இரவாய்
உன் வரவை காத்து கிடக்கின்றேன்..
தண்ணீர் தேடும் தரையில் மீனாய்
கணத்த பொழுதை கடக்கின்றேன்...!

செல்ல பெயரை உச்சரித்து
அவ்வப்போது சிரிக்கின்றேன்..
கொல்லும் உந்தன் பிரிவை எண்ணி
அடுத்த கணம் வெறுக்கின்றேன்..!

உன் நெருக்கம் இன்றி உறங்கும் நேரம்
நெருஞ்சி முல்லாய் படுக்கை ஆகும்..
என் நெஞ்சில் நீயும் சாயும் காலம்
நெசவு செய்த மலராய் மாறும்...!

தேக்கி வைத்த காதல் செய்தி
காணும் நாளில் என் கண்கள் கூறும்..!
உயிரே உன்னை மணக்கும் தேதி
என்று எந்தன் விதியில் சேரும்...?

நத்தை போல நகரும் நொடிகள்
நாளும் என்னை வாட்டுதடி...
வித்தை புறியும் விழியை கண்டால்
ஆயுள் வரம் கூடுமடி...!

எழுதியவர் : Safeeq Rahman (9-Sep-18, 8:24 pm)
சேர்த்தது : dkmalathi
பார்வை : 560

மேலே