dkmalathi - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  dkmalathi
இடம்:  மலேசியா
பிறந்த தேதி :  20-Oct-1984
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  10-Sep-2012
பார்த்தவர்கள்:  463
புள்ளி:  102

என்னைப் பற்றி...

கற்றுக்கொண்டே இருக்கிறேன்..

என் படைப்புகள்
dkmalathi செய்திகள்
dkmalathi - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jun-2024 10:07 am

ஜன்னல் இருக்கைதான் வேண்டுமென
போட்டிப்போட்டு கொண்டதைச் சொல்லவா?

பாலிக்குப் பறந்த நாங்கள்
பலியாக இருந்த தருணத்தைச் சொல்லவா?

விமானம் கண்டபடி
குலுங்கிச் சென்றதைச் சொல்லவா?

பயத்தில்
அனைவரும் ஒருசேர
இறைவனை வேண்டியதைச் சொல்லவா?


மழை, இடியென
மேகக்கூட்டத்தினிடையே
இலாவகமாய் விமானஞ்செலுத்தி
பாதுகாப்பாய் தரையிறக்கிய
விமானியின்
திறமையைச் சொல்லவா?

தரையிறங்கியதும் உயிரைக் காத்த
விமானிக்கு அனைவரும் நன்றி சொல்கையில்
நான் மட்டும்
இரசித்த அவரழகைச் சொல்லவா?

முதல் பயணம்
உயிர் பயம் தந்தாலும்
இப்பொழுதெல்லாம்
பயணித்தால் 'ஏரோப்லேன்'தான்
என்று தயக்கமின்றி பயணிக்கிறேன்
அவ்விம

மேலும்

dkmalathi - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jun-2024 10:05 am

போதைப்பொருள்,
வன்புணர்வு,
உறுப்புத் திருட்டு,
ஆள்கடத்தல்,
உடல் பருமன்,
கொடிய நோய்களென
எந்தவொரு பயமின்றி
சிறுவர் கூட்டம்
மனைவிட்டு
வெளியே
நிம்மதியாய்
பட்டாம்பூச்சியாய்
என்று பறக்கிறதோ
அன்றே
அந்த நாடு
சுதந்திர நாடேன்பேன்..

நாமனைவரும்
இரசித்து வாழ்ந்த,
இன்றும் எண்ணவோட்டத்தில் நினைவலைகளாய் மகிழ்ச்சியை அள்ளித்தந்து
இன்புற்று வாழ உந்துகோளாய்
அமைந்த இளம்பருவத்தை இழக்கும்
ஒவ்வொரு சிறுவர்களின்
மனக்குமுறல்கள்
*ஒரே குரலாய்*...
உள்ளேயே இரு
என்றதும்
அவர்களின்
ஏங்கிய விழிகளில்
பிரதிபலிக்கும்போது
மனங்கசக்குதய்யா!

மேலும்

dkmalathi - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jun-2024 10:03 am

பெருங்கனவோடு
மண வாழ்க்கையில்
காலடி எடுத்து வைக்கும்
தேவதைகள்
மணாளனிடத்தில்
நாளடைவில்
தோய்ந்து போகும்
அன்பினால்
உடைந்தே போகும் தருணம்..

பிள்ளைகளும் கணவனும்
திறன்பேசியில் மூழ்குகையில்
இவர்களுடன்
பேசப்
போராடிப் போராடி
பெருந்தனிமையில்
மூழ்கும் கண்ணீர் பூக்களாய்
இன்றும்
பல இல்லங்களில்
பலர்...

வாழ்நாள் துணை என்றுநினைத்தே
மணம்புரியும்
பெண்கள்
அனைவரும் சூழ்ந்திருந்தும்
அனாதையாக வாழ்வதற்கு
'90ஸ் கிட்ஸ்' போலே
இனிய தனிமையில்
வாழ்ந்திருக்கலாம்..

இதில் பாவப்பட்ட
ஜென்மங்களான,
திருமணத்திற்காக
காத்திருக்கும்
பெண்களிடத்தில்
வந்து
தத்தம் மண வாழ்க்கையின் சோகத்தைச்
சொல

மேலும்

dkmalathi - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jun-2024 10:02 am

மாலதி தேசிகாமணி

இளம்
மணமக்களை
வாழ்க வாழ்கவென
வாழ்த்த
குடும்பம் குடும்பமாய்
ஏறி
புகைப்படமெடுத்து
கொண்டிருக்கையில்..

ஓர் ஓரமாய்
மணமக்களின் பெற்றோர்களின் கையில்
திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்
அந்தப் பரிதாபமான
மொய்கள் சொல்லும்..

தங்களை அப்படித் திணித்தவன்
சிரித்த முகத்தின்
பின்னே
மறைக்க முயலும்
மன ஏக்கத்தின்
கண்ணீர்த்
துளிகளினை..

மேலும்

dkmalathi - dkmalathi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jun-2016 9:00 pm

மிருகம் கூட இப்படிச் செய்யாது...
தன் இனத்தை உறுப்புக்காகக் கொல்லாது....
மனிதனைக் கொல்லும் அந்தக் கொடூர இனத்துக்கு
என் அகராதியில் என்றுமே மன்னிப்பு கிடையாது...

மேலும்

கருத்துக்கு நன்றி நண்பா... நாட்களில் ஆறு ஐந்திடம் தோற்கும்; விழாக்காலங்களில் ஐந்து ஆறிடம் தோற்கும்... என்ன நான் சொல்றது? 09-Jun-2016 9:25 pm
ஆனால் இன்று ஆறும் ஐந்திடம் தோற்றுத்தான் போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Jun-2016 5:44 am
dkmalathi - dkmalathi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jan-2016 4:44 pm

என் முகத்தில் தண்ணீரை யாரோ தெளித்து, உலுக்கி எழுப்பினார்கள்.
கண் விழித்து சுற்றி முற்றிலும் பார்த்தேன்.
எனக்கு ஒன்றும் நினைவில்லை; அழுகை வரவில்லை; துக்கம் தொண்டையை அடைத்துகொண்டு மூச்சு விட முடியவில்லை.

சஞ்ஜனா எப்படி சாக முடியும்? இப்படிக் கூட கொலை செய்யலாமா? உண்மையாகவே செத்துட்டாளா? நான் கனவு காணுகிறேனா? கையைப் பல முறை கிள்ளிப் பார்த்தேன். வலிக்கிறது.. அப்படியென்றால் என் கனவில் மண்ணைப் போட்டு மூடிவிட்டார்களா?

பிணம் வைக்கப்பட்ட திசையைப் பார்த்தேன்.
“ஆ...ஐயோ... சஞ்சனாஆஆஆ.. ..”
நான் கத்தும்போது என் நெஞ்சு வெடித்து, இரத்தம் கசியும் வலியை உணர்ந்தேன். ரிஷி என்னைச் சமாதானப் படுத்துகிறா

மேலும்

அக்கா உயிரோட இருக்க மாரி எழுது அக்கா ப்ளீஸ் 22-Jan-2016 9:50 pm
இன்னும் யோசிக்கல நண்பா! எங்கேயாவது ஒரு twist வெச்சு பாக்குறேன். 22-Jan-2016 9:21 pm
அக்கா அந்த பொண்ணு உயிரோட வருமா அக்கா 22-Jan-2016 9:17 pm
ரொம்ப நன்றி... இன்னும் நல்லா எழுத முயற்சி செய்யுறேன்! 22-Jan-2016 9:11 pm
dkmalathi - பீமன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jun-2015 1:20 am

கடலுக்குச் சென்று மீன் பிடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டிக்கு ஏற்பட்டது. தன் விருப்பத்தைக் குருவிடம் தெரிவித்தான்.

அதைக் கேட்ட மடையன், "குருவே! பகலில் போனால், பெரிய பெரிய அலைகள் நம்மைச் சாகடித்து விடும். அதனால் ராத்திரியில் தான் போக வேண்டும்" என்றான்.

"ஆமாம் குருவே! அப்போது தான் கடல் தூங்கிக் கொண்டு இருக்கும்!" என்றான், மண்டு

"ஒரே இருட்டாக இருக்குமே? என்ன செய்வது?" எனக் கேட்டான் மூடன்

"என் கையில் தான் கொள்ளிக்கட்டை இருக்கிறதே!" என்றான், முட்டாள்.

கடல் என்றதுமே பரமார்த்தருக்குப் பயமாக இருந்தது. இருந்தாலும், சீடர்கள் தன்னைக் கோழை என்று நினைத்து விடக்கூடாது என்பதால் சம்மதம் தெரிவித்தா

மேலும்

குரு நல்லவரா கெட்டவரா??-னு கேட்க தோனுது....ஹெஹே 19-Jun-2015 10:20 am
dkmalathi - பீமன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jun-2015 1:11 am

ஓர் ஊரில் பெரிய பண்ணையார் ஒருவர் இருந்தார். அந்த ஊரில் இருந்த பெரும்பாலான நிலங்கள் அவருக்குத் தான் சொந்தம்.

அவரிடம் முனியன் என்ற உழவன் வேலை பார்த்து வந்தான். அவனுக்குக் குடிசை ஒன்றும் சிறிதளவு நிலமும் இருந்தன.

பண்ணையாரிடம் வந்த அவன், " ஐயா! எல்லா நிலத்திலும் உழுது விதை நட்டு விட்டார்கள். என் நிலம் மட்டும் தான் வெறுமனே உள்ளது. நீங்கள் சிறிது தானியம் தாருங்கள். என் நிலத்திலும் விதைத்து விடுகிறேன்" என்றான்.

" என் நிலத்திலேயே உழுது பயிரிடு. சொந்தமாகப் பயிரிட வேண்டாம். பண்ணையாராகும் ஆசையை விட்டு விடு. கூலியாளாகவே இரு. அரை வயிற்றுக் கஞ்சியாவது கிடைக்கும்" என்று கோபத்துடன் சொன்னார் அவர்.
சோ

மேலும்

நன்னெறியை உணர்த்தும் கதை... நன்றாக உள்ளது 19-Jun-2015 10:14 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (45)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
Gaston GN

Gaston GN

இலங்கை
user photo

ரகு கமல்

திருச்சிராப்பள்ளி

இவர் பின்தொடர்பவர்கள் (46)

இவரை பின்தொடர்பவர்கள் (45)

மேலே