சேமமுற வாழலாம்
இரு பிள்ளை போதுமென
நினைக்கும்
இன்றைய தலைமுறைக்கு
சிக்கனத்தை பற்றி—இதைவிட
சிறப்பா நான் என்னத்த
சொல்ல
ஒரு வருடம் எனக்கூறி
முதியோர் இல்லத்தில் சேர்த்து
மூன்றாண்டு முடிந்தும்
பெற்ற தாயை பார்க்காமல்
பிள்ளை வாழ்வது தர்மமா?—இல்லை
பணத்தின் சிக்கனமா?
வாழ்வாதாரங்கள்
வழிமாறி போகையில
நாளும் போராட்டமென்றால்
நாணயம் கிடைப்பதெப்படி?
சிந்தித்து, செயல்பட்டு
சிக்கனமா வாழுங்கள்
சிறுவயது முதலே
சிக்கனமா வாழ
அடுத்த தலமுறைக்கு
அன்போடு கற்றுக்கொடுங்கள்
சேமித்து வாழ்ந்தால்
சேமமுற வாழலாமென்பதை.