யாரிவளோ

தண்ணீர் தேசத்தில்
தன்னிகராய் பிறந்தவளோ?

பாலைவனத்தில் பால் சுரக்க
பாடம் சொல்ல வந்தவளோ?

சிறந்த ஓவியனின்
வண்ணக் குழம்பில் குளித்தவளோ?

சிற்பியின் சிதறலில்
சிதறாத சிற்பமோ?

மாயாசால குடுவையில்
மர்மமாய் பிரசித்தவளோ?

வான்வழி வந்து
வயல்வெளி சென்றவளோ ?

சிறந்த புகைப்பட கருவியின்
தொலைந்த படச்சுருளின் ஒரு பிரதியோ?

பிரம்மன் படைத்தது பிரமித்து
அரைமனதாய் பூலோகம் அனுப்பியவளோ ?!!!

எழுதியவர் : குணா (19-Sep-18, 4:13 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
Tanglish : yaarivalo
பார்வை : 388

மேலே