யாரிவளோ
தண்ணீர் தேசத்தில்
தன்னிகராய் பிறந்தவளோ?
பாலைவனத்தில் பால் சுரக்க
பாடம் சொல்ல வந்தவளோ?
சிறந்த ஓவியனின்
வண்ணக் குழம்பில் குளித்தவளோ?
சிற்பியின் சிதறலில்
சிதறாத சிற்பமோ?
மாயாசால குடுவையில்
மர்மமாய் பிரசித்தவளோ?
வான்வழி வந்து
வயல்வெளி சென்றவளோ ?
சிறந்த புகைப்பட கருவியின்
தொலைந்த படச்சுருளின் ஒரு பிரதியோ?
பிரம்மன் படைத்தது பிரமித்து
அரைமனதாய் பூலோகம் அனுப்பியவளோ ?!!!