இப்படி இருந்தால் எப்படி

பௌர்ணமி நிலவும்
உன் நிறத்தை கண்டு
கொஞ்சம்
பொறாமை கொண்டதடி...🌝

நீ தொட்ட தூரிகை எல்லாம்
உன் ஆறாம் விரலாய் மாற
இறைவனிடம் வேண்டுமடி...🖌

மருதாணியும் உன்னை
மகிழ்விக்க அதன்
உதிரத்தை சிந்துமடி...😍

உன் தோள் பையும்
உன்னிடம் தோழியாக
தொல்லை செய்யுமே....👜

உன் கைகுட்டைகள் எல்லாம்
கைகட்டி நிற்குமே
உன் கை கூட்டிற்குள் செல்ல...❣

நீ அணியும் கண்ணாடியும்
கண்ணடிக்குமே
உன் கண்களை கண்டு..👀

நீ ரசிக்கும் ரோஜா மொட்டும்
பூத்திடுமே உன்னை காண..🌹

நீ பூந்தோட்டம் சென்றால்
பூக்களும் பூங்கொத்து ஆகுமே
உன்னிடம் அதன் காதல் சொல்ல...

புகைப்படம் கூட புன்னகைக்கும்
உனது புன்னகையை கண்டு...😍

ஸ்கூட்டிகள் எல்லாம் ஸ்டைலாக ஸ்டாண்டில் நிற்கும்
உன்னை சைட் அடிப்பதற்காக...😜

உன் காலணியெல்லாம்
காலம் முழுதும்
உன் காலடியில் அகபட ஆசை கொள்ளுமடி...👠

இப்படி இருந்தால்
எப்படி பெண்ணே
கட்டுப்படுத்துவது
என் வார்த்தைகளை
உன்னை வர்ணிக்காமல்...😍

எழுதியவர் : வெ.பவித்ரா (20-Sep-18, 11:39 pm)
சேர்த்தது : தாரா
பார்வை : 1445

மேலே