என் இணையனே

என் இணையனே
உனக்காக நான் என்றும் இருப்பேன்
உன்னால் ஒரு போதும் என்னை மறவாமல் இருப்பாயா?
உன்னை நம்பி இந்த பாலைவனத்தில் நான் கிடக்க
என் வாழ்வு பசுமையை சுமப்பது எப்போது என் தலைவனே
ஒரு சொட்டு நீர் கூட இல்லாமல் நான் வாழ்ந்திடுவேனோ என்னமோ
உன்னை ஒரு கணம் கூட நினைக்காமல் இல்லை
இந்த கரிசல் காட்டில் முளைத்த பூவாய் நான்
நான் என் மனம் வாடி விடுமய்யா
நீ இல்லாமல்
என் இணையனே
நீ பிரிந்த தருணம் ஏனோ விளையாட்டாய் நினைத்தேன்
இன்றோ பரிதவிக்கிறேன்
ஏதோ என் செல்வம் இழந்தது போல
உண்மை தானே
நீ என் செல்வம் தானே !
என் இணையனே
நீ வருவது எப்போது ?
என் மன்னவனே
உனக்காக காத்திருக்கும்
உன்னவளாய் நான்
மனதால் வாடுகிறேன்
உதட்டால் சிரிக்கிறேன்
இது உன் மயத்தாலோ ?
பித்து பிடித்து அலைகிறேன்
என் கரம் பிடித்தவனே
என் மனம் பற்றியவனே
உனக்காக நான் எத்தனை யுகங்கள் ஆனாலும் காத்திருப்பேன்

எழுதியவர் : பிரகதி (4-Oct-18, 9:48 pm)
சேர்த்தது : அரும்பிசை
பார்வை : 94

மேலே