நான் கவிஞனாகின்றேன்

மாமழை பொழியும்போதும்
மொட்டொன்று விரியும்போதும்

மலைமேகம் தவழும்போதும்
மனமோகம் குழையும்போதும்

குழந்தையொன்று சிரிக்கும்போதும்
குமரியொருத்தி நடக்கும்போதும்

பொங்குநதிப் புரளும்போதும்
பூமியெங்கும் செழிக்கும்போதும் - நான்

கவிதையென்று கிறுக்குகின்றேன்
கவிஞனென ஆகின்றேன்.......

எழுதியவர் : (18-Oct-18, 8:11 am)
சேர்த்தது : முகில்
பார்வை : 55

மேலே