நான் கவிஞனாகின்றேன்
மாமழை பொழியும்போதும்
மொட்டொன்று விரியும்போதும்
மலைமேகம் தவழும்போதும்
மனமோகம் குழையும்போதும்
குழந்தையொன்று சிரிக்கும்போதும்
குமரியொருத்தி நடக்கும்போதும்
பொங்குநதிப் புரளும்போதும்
பூமியெங்கும் செழிக்கும்போதும் - நான்
கவிதையென்று கிறுக்குகின்றேன்
கவிஞனென ஆகின்றேன்.......