என் மகன்

என் அன்பு மகனே
அழகிய ஓவியமே..
வேண்டாம்டா உனக்கு
இது...

புதிதாய் மலர்ந்தவன்
நீயடா...
உன் செவிகளை
இப்போதே நவீனங்களிடம்
அடகு வைக்காதே..

நீ கேட்க
இறைவன் தந்த
இனிமையா
குயிலின் கீதமும்
அழகிய அருவிகளின்
ஓசையும் உனக்காக
காத்திருக்கிறது...

கதிர்களை அனுப்பி
உன் பிஞ்சு
நரம்புகளை சேதமாகும்
இந்த அரக்கன்
வேண்டாம்டா மகனே..

நீ கேட்க
வேண்டியது நிறையவே
இருக்கு ...
பாசம் கொண்ட
உறவுகளோடு
உரையாடு..

நீ உலகை
அறிந்து கொண்டே
உலகிட்கு உன்னை
காட்டு...
தொழிநுட்பம் உனக்காகத்தான்..
அது என்றும்
உன் சேவகனே..

காலம் பல
கடந்தாலும் நீ.
நல்லதென நினைத்து
நாகரிகத்தை
பக்குவமாய் எப்போதும்
பயன்படுத்திக்கொள் மகனே..

எழுதியவர் : (19-Oct-18, 11:33 am)
சேர்த்தது : பச்சைப்பனிமலர்
Tanglish : en magan
பார்வை : 135

மேலே