ஒருதலைக் காதல்

காதலைச் சொன்னோமென்ற
கணநேரச் சந்தோசமும்
காணக்கிடைக்கவில்லை எனக்கு...

ஏலவே...எப்போதோ...உன்னிடம்
தொலைந்த என்னிதயத்தைத்
தாவென்கிறான் இன்னொருத்தன்...

வெறுங்கையோ டிலங்கை புக்க
வேந்த னிராவணன் போல் இன்று
வில்லறு நிராயுதபாணியாய் நான்...
~ தமிழ்க்கிழவி (2018)

எழுதியவர் : தமிழ்க்கிழவி (20-Oct-18, 5:33 am)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
பார்வை : 222

மேலே