நீரில் மூழ்காத அருவிகள்

அந்த கனவுக்கு
மேனியில்லை
இருந்தும் குறுகிநின்றது
ஆடையில்லாமல்....
இத்துனைக்கும்
அது உருவமும்
நிறமுமற்றது
உற்றுநோக்கியும்
உள்ளும் புறமும்
விளங்கவில்லை....
பூட்டாத சிறைக்குள்
தன்னை பூட்டி கொண்டு
சுதந்திர காற்று
தன்னை
சிதைத்து விடுமோயென...?
ஆகாயமும் அறியாமல்
ஆழமும் தெறியாமல்
எவ்வளவு வெள்ளத்திலும்
மூழ்கிடாத அருவிகள்
இந்த மிடில் கிளாஸ்....

எழுதியவர் : சுரேஷ் குமார் (28-Oct-18, 12:28 am)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 103

மேலே