மலையருவிச் சாரலிலே

மலையருவிச் சாரலிலே மனம்சிலிர்த்துத் துள்ளும்
***வழியெங்கும் வெண்மேகம் வந்துமுத்தங் கொஞ்சும் !
குலைதள்ளும் வாழைப்பூ குங்குமமாய்ச் சிவக்கும்
***குளிர்ந்தாடித் தென்றலிலே கொடிமலரும் விரியும் !
வலைதப்பும் கயல்மீன்கள் வடிவாகச் சிரிக்கும்
***மடைவழியே பாய்ந்திடவே வழிதேடித் திரியும் !
தலைமீதில் தண்ணீருந் தடையின்றிக் கொட்டும்
***தாமரையும் புன்னகைக்கும் தள்ளாடிக் கொண்டே !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (10-Nov-18, 11:08 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 137

மேலே