பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்
******************************************
உன்னை காதலிக்க ஆரம்பித்த நாட்கள்
இரவு பகல் பாராமல்
அன்னம் தண்ணீர் எடுக்காமல்
கண்ணுறக்கம் இல்லாமல்
உணவு சரியாக இறங்காமல்
சரியாக உறங்காமல்
உன்னில் மூழ்கி கிடந்தேன்
உறங்கும் நேரமும்
என் மார்பில் தான் நீ தூங்குவாய்
உறங்கா நேரங்களில் என் மடியினில் தவழ்ந்திடுவாய்...
பல இரவுகளில் உன்னில் மயங்கி விழுந்த பின் தான் உறங்கி இருக்கிறேன்
உன் மீது உண்டான மோகத்தில்
சில நாட்களிலேயே உன்னை முழுவதும் படித்து விட்டேன்
எத்தனை முறை படித்தாலும் நீ எப்பொழுதும் புதுமை தான்...
முடியாது நீளக்கூடாதா என்றே ஏங்க வைத்தாய் என்னை
யாவையும் உனக்குள் நிறைத்திருந்தாய்...
எப்பொழுதும் என்னை நிறைத்திடுவாய்...
உன்னில் இல்லாததென்று எதுவும் இல்லை...
நீ இல்லாமால் நான் இங்கு வாழ்வதில்லை..,
~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (17-Nov-18, 10:56 pm)
பார்வை : 311

மேலே