கடிவாளமாய்

நண்பர் நால்வர் சேர்ந்தாலே
நன்றாய்ப் பேசி ஒன்றாகப்
பண்புடன் நடந்த செயலெல்லாம்
பழங்கதை யாகிப் போனதுவே,
அண்மையில் வந்தே அமர்ந்தாலும்
அடுத்த வீட்டுக் காரரையும்
கண்ணில் படாமல் வைத்திருந்தே
கட்டிப் போட்டிடும் கைபேசியே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (18-Nov-18, 6:50 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 83

மேலே