தோழி
தூது வந்தது தோழி உன் தூய்மை புரிந்தது தோழி.
நம் கருவறை தனி அறை தான்
கல்லறையும் அப்படித்தான்...
இரு அறைகளுக்கும் இடையில்
இறைவன் அமைத்த பாதையில் இது வரை ஒன்றாய் பயணித்தோம்..
இனியும் அது போல் கைகோர்க்க
வல்ல நாயன்
வழி செய்ய வேண்டும்..
வாழ்வின் வலி சுமந்த வேளைகளில் விழி நீர் துடைத்த உன்னத ஆத்மா நீ..
காலம் ஒரு முடிவிலியாய் சுழல
அன்பெனும் கடிகாரத்தில் ஒவ்வொரு நாளிகையிலும் சுற்றிச் சுழலும் முட்களாவோம்.. சற்று விலகினாலும் முன்னும் பின்னும் துணை செல்வோம்..
மரபுகள் காத்து வாழ நினைக்கும் மாண்புறும் எண்ணங்கள் சுமந்த தோழியே..
சத்திய மார்க்கம் துணை நிற்கும்,
சாதனைக்கு என்றும் வழி வகுக்கும்.
பெற்றோர் மனங்குளிர
சீரிய வாழ்வு
சிறப்பாய் நீ
வாழ்ந்திடுவாய்...
உனக்காய் ஒரு வாழ்த்து மடல்
என் மன மலர்கள் மணம் பரப்பும்..
சாளரம் ஊடே தூறல் மழை
காதோடு ஒரு கவி சொல்லும்.
நேசம் அறிந்த நட்பில்
நெகிழ்ந்து போனேன்.
நலமாய் நீ வாழ
நிதம் விரும்புகிறேன்.
ஒளிரும் முழு மதியும்
படரும் கதிரொளியும்
உனக்கென முகம் காட்டும்.
கண்ணம்மா..
கொட்டும் வான் மழையும்
உன் பிறப்பிற்கு வாழ்த்து சொல்லி நிலம் வருகிறது ..
செம்மண் வாசத்தோடு
செந்தமிழ் சுவையோடு
நலம் வாழ என் வாழ்த்துக்கள்...
உன் எண்ணத்தில் ஒரு வண்ணமாய் !
பர்வின்.