காதல் செய் கள்வனே

நான்கு விழி
நோக்கிய வேளையிலே /
மான் விழி வழியே என்
உயிர் நுழைந்தவனே /
இரவு தூக்கத்திலே
கனவோடு கலந்து வருபவனே /
கசங்காத என் சேலை
கசங்கிட வேண்டுமடா சின்னவனே /
யானை சுவைக்காத
செங்கரும்பு உடலடா மன்னவனே /
நுகர்ந்தவாறே மலர் மீது
ஊரும் தேனீபோல் /
நுகர்ந்து சுவைத்திட
நீ வந்து விடு நாயகனே /
செவ்வாழை நானடா /
உன் கரம் கொண்டு /
மாலை மாத்தடா மாதவனே/
உள்ளமதை கொள்ளையிட்டு /
உணர்ச்சியை திறந்து விட்டே சேவகனே /
நித்தம் நான் முத்தமழையிலே/
குளிக்க வேண்டுமடா /
யுத்தமின்றி காதல் செய் கள்வனே /