நான் மட்டும் எம்மாத்திரம்

பெண்ணே....
உன் அழகை முழுமையாக
வர்ணிக்க முடியாமல்....

கம்பனும் தோற்று எழுத்தாணி துறந்தார்
கண்ணதாசன் பாதி வர்ணித்து மீதி தடுமாற
வைரமுத்துவோ கவிதை எழுத மறந்து
மேனகை கண்ட விஸ்வாமித்திரரானார்..
முத்துக்குமார் உன் பேரில் சொத்தெல்லாம்
எழுதி சொல்லாமல் விடை பெற்றார்
இது கண்டு மதன் கார்க்கி பேதலித்து
மௌனமாயிருக்க...

நான் மட்டும் எம்மாத்திரம் ???

எழுதியவர் : ஜெய் ரெட்டி (9-Dec-18, 12:07 pm)
பார்வை : 351

மேலே