புரட்சி கவிஞனின் பிறந்தநாள்

புரட்சி கவிஞனே
காவியங்கள் பல படைத்து
மக்களின் மனதிலே
நீங்கா இடம் பிடித்து
இலக்கியத்திலே சிகரங்களை தொட்ட எழுச்சி கவிஞனே
வாழ்க உன் புகழ் இவ்வையகம்
உள்ள வரை...

பாரதியே...!
உன் தீக்கவிதைகளின்
தனல் தாங்காமல் - இங்கே
வெள்ளையன் தங்காமல்
போய்விட்டான்...

உன் முறுக்கு மீசையிலே
ஒரு கம்பீரம்
உன் ஒளி வீசும் பார்வையிலே
தெறித்தெழும் கணைகள்
உன் முண்டாசு அது
தழிழன்னை சூட்டிய மகுடம்
உன் வீரநடையிலே
கதிகலங்கிப்போகும் எதிரிகள் கூட்டம்...

தீண்டாமைக்கு
தீ வைத்தவனே
பெண் விடுதலைக்கு
வித்திட்டவனே
விதி என்றில்லாமல்
விதிக்கே ஒரு விதி எழுதி
உலகத்திலே
புதுவிதியொன்றை செய்தவனே
நிலைக்கட்டும் உன் புகழ்...

கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (11-Dec-18, 11:34 am)
பார்வை : 346

மேலே