என்னவள்
நீலவானில் மிதந்துவரும் நிலவு
வான் நிலவு நித்தம் நித்தம்
நாம் காணும் இந்நிலவு
முழுநிலவாய், பால்நிலவாய்
தண்ணிலவாய்க் காய்ந்தாலும்
பௌர்ணமியில்தான் முழுநிலவு
பின்னர் பாவம் தேய்நிலைவாய் காய்ந்து
மாதத்தில் ஓர் நாள் காணாது போய்விடுமே
என் காதலி இவள் மண்ணில்
நான் கண்ட முழுநிலவு
என்முன்னே தோன்றும்போதெல்லாம்
பூரண பௌர்ணமி நிலவு அவள்
தேய்வில்லா இந்நிலவு இவள்
என் வாழ்வில் வசந்த நிலவு
என்னை வாழவைக்க வந்த பெண்ணிலவு
தன்னிகரில்லா தேன்நிலவு இந்நிலவு