சமர்ப்பணக் கவிதை...
கருஞ்சட்டை மீதமர்ந்த கருப்பொருளை
இருள்விலக்க இடைமறைக்கும் கார்முகிலாய்,
பொருள்புகுத்தி நிலம்துறந்து போனபின்னும்
தெருவெல்லாம் நிழலாட தேங்கிநிற்கும் உங்கள்முகம்...
கருமையான கரிக்கோலை இருவிரல் இடைபுகுத்தி
அருமையான தமிழமுதை ஆக்கிவிட நினைக்கின்றேன்,
ஒருவேளை உயிர்த்திருந்தால் உங்களைப்போல் நானிருப்பேன்
திருவிடத்தே பகுத்தறிவைச் சொல்லித்தந்த பெருந்தகையே...!