ஆண்கள் கட்டாயம் கட்ட வேண்டியது

அரைஞாண் கயிறு உண்மையில் எதற்காக நம் முன்னோர்கள் நம்மை கட்ட சொல்லி வற்புறுத்தினர் தெரியுமா? அரைஞான் கயிறு என்பதற்கு ’அரை + நாண் + கயிறு” என்று பொருள். அதாவது பாதி உடலில் கட்டும் கயிறு என்பது பொருள் ஆகும். கிராமங்களில் ஒரு சொல்வாடை உண்டு. மனிதனுக்கு எதன் மீதும் பற்று இருக்க கூடாது என்பதற்ககாக, “மனிதன் செத்தால் அருணாகயிரோட மிஞ்சாது” என்பார்கள்.

பருத்தியினால் செய்யப்பட்ட வேட்டி நமது பாரம்பரிய உடையாகும். நமது மூதையார்களின் முக்கிய தொழிலான விவசாய வேலைகளின் போது, டிரவுசர் என்று சொல்லக்கூடிய கால்சட்டை வருவதற்கு முன்னால் கோவணம் முக்கிய உடையாகும். அந்த கோவணத்தை கட்டுவதற்காக அரைஞான் கயிறு கட்டப்பட்டது.

அந்தகாலத்தில் பேய் பற்றிய பயத்தைப் போக்கக் கறுப்புக் கயிறு, இரும்புத் துண்டு, விளக்கமாறு, ஏதாச்சும் ஒரு பொருள் இருந்தால் போதும் என்ற நம்பிக்கை இருந்தது. எல்லாச் சிறுவர்களின் இடுப்பிலும் கறுப்பு அரைஞான் கயிறு கட்டினார்கள். இதுவே பாரம்பரியமாக பழக்கத்தில் உள்ளது.
"அரைஞாண்" நாம் சின்ன வயதில் நம் பெற்றோர் வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும் ஒரு கருப்பு கயிறு. எதற்கு இதை நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டால், திருஷ்டி பட கூடாதுன்னுதான் கட்டி விடுறோம்னு சொல்லுவாங்க. உண்மையிலேயே இதுக்கு தான் இந்த கருப்பு கயிற்றை கட்டுகிறோமா? நிச்சயமாக இல்லை. அந்த அரைஞாண் கயிற்றின் பலன்கள் பல விதங்களில் உள்ளது.
ஏன் ஆண்கள் கட்டாயம் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா?

அரைஞாண் கயிறு என்றாலே இன்று பலரது முகம் சுழித்துக் கொள்ளும். மேலும், யாராவது அரைஞாண் கயிறு கட்டியிருந்தால் "நீ என்ன கிராமத்தானா?" என சற்று ஏளனமாகவும் கேட்போரும் இருக்கிறார்கள். ஆனால், அரைஞாண் கயிறு என்பது வெறும் சம்பிரதாய வழக்கம் அல்ல, இதன் பின்னணியில் மருத்துவமும் இருக்கிறது என்பது பலரும் அறியாத ஒன்று.

இது மட்டுமா? பெண்கள் கொலுசு அணிவது, திருமணத்திற்கு பிறகு மெட்டி அணிவது போன்றவற்றிலும் கூட மருத்துவ நன்மைகள் அடங்கி இருக்கின்றன. ஏனெனில், இது பெண்களின் கர்ப்பப்பை வலுவை அதிகரிக்கிறது. இது போல தான் ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டுவதும். இதன் பின்னணியில் ஆண்களுக்கு உண்டாகும் ஆரோக்கிய நன்மை அதிகம் உள்ளது

நோய் தடுப்பு முறை

ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டுவது என்பது ஓர் மருத்துவ முறை ஆகும். இது இன்றைய தலைமுறையில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இயல்பாகவே பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக குடல் இறக்க நோய் ஏற்படும்.

குடல் இறக்க நோய்

பெண்களோடு ஒப்பிடுகையில் ஆண்களுக்கு 90% குடல் இறக்க நோய் அதிகமாக ஏற்படுகிறது. இதை தடுக்கவே ஆண்கள் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டது.

உடல் எடை

உடல் எடை அதிகரிப்பதால் உண்டாகும் அதிகப்பட்ச தீமையாக உண்டாவது குடல் இறக்க நோய் என கூறப்படுகிறது ஆங்கிலத்தில் இதை ஹெரணியா என கூறுகிறார்கள். இது ஏற்படாமல் தடுக்க தான் அரைஞாண் கயிறு கட்டும் பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது.

கருப்பு கயிறு

ஆரம்பக் காலத்தில் அரைஞாண் கயிறு என்பது கருப்பு கயிறில் தான் கட்டப்பட்டு வந்தது. பிறகு பகட்டு மற்றும் வசதியின் காரணத்தால் வெள்ளி, தங்கள் என கட்ட துவங்கினர்.

அரைஞாண் கயிறு நீக்கம்

சிறையில் பாதுகாப்பு கருதி கைதிகளின் அரைஞாண் கயிறு நீக்கவிடுகிறார்கள். மற்றும் மனிதர் இறந்த பிறகு சடங்கின் போது அரைஞாண் கயிறு நீக்கப்படுகிறது..

அரைஞாண் பெயர் விளக்கம்

ஞாண் என்றால் தொங்குதல் என்று பொருள். அரை என்பதற்கு இடுப்பு, அரை உடல் என்ற பொருளும் இருக்கிறது. இதனால் தான் அரைஞாண் கயிறு என இதற்கு பெயர் பொருள் வந்தது

மகாபாரத கதை

மகாபாரதத்தில் திருதராட்டிரன் பிறவியிலேயே கண் பார்வை இல்லாமல் போனதால் காந்தாரியும் தனது கண்களை கட்டிக் கொண்டு வாழ்ந்தார். பதிபக்தியின் காரணமாக பல சக்திகள் கொண்டிருந்தார் காந்தாரி.

குருட்சேத்திரப் போர்

குருட்சேத்திரப் போரில் துரியோதனன் வீழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக காந்தாரி தன் பார்வை சக்தியால் அவனது பலத்தை அதிகரிக்க ஆடையின்றி வருமாறு கூறினார்.

கிருஷ்ணனின் வேலை

துரியோதனன் செல்லும் வழியில் கிருஷ்ணன் இடை புகுந்து அம்மாவாக இருப்பினும், ஓர் ஆண்மகன் இப்படி முழு நிர்வாணமாக செல்வதா? என கூறி இடுப்பில் ஒரு கயிற்றைக் கட்டி அனுப்பினார்.

துரியோதனனின் வீழ்ச்சி

காந்தாரி தன் பார்வையைத் துரியோதனன் தலையிலிருந்து கீழாக இறங்கி வர இடையில் அரைஞாண் கயிற்றால் தடைபட்டது. இதுவே குருட்சேத்திரப் போரில் துரியோதனனை பீமன் கதாயுதத்தால் தலை,மார்பு ஏனைய உறுப்புகளில் தாக்கியும் வீழ்த்த இயலாமல், கிருஷ்ணரின் சமிக்ஞையால் பீமனால் துரியோதனன் தொடை பிளந்து கொல்லப்பட்டான்

முதலாவது பலன்
-------------------------------------
அரைஞாண் என்பது கிராமத்தில் வசிக்கும் அன்பர்களுக்கு அவசர கால் உதவி..கழனியிலும் காடுகளிலும் தற்பலம் மறந்து பிறர் நலம் பேணும் ஏழைகளுக்கு கரம் கொடுக்கும் ராஜ தந்திரி அது.. விடம் கொண்ட பூச்சிகள், பாம்பு தடம் பதித்து ஊடாடும் போது அவர்களுடன் வசிப்பவை அவை. எதிர்பாராமல் தீண்டப்பட்ட போது கதிர் முற்றிய கழனியில் கயிறு கிடைப்பது அரிது. விடத்தின் கடிவாய்க்கும்
இதயத்துக்கும் இடையே மருத்துவத்திற்குச் செல்லுமுன் தடைபோடும் உத்திக்கு அரைஞாண் கயிறு உற்ற தோழன்.

கையினால், விடம் உற்ற நேரம் அரைஞாண் கயிறு அறுத்தெடுக்கப்பட்டு அவசர உதவியாய் இறுக்கிக் கட்டப்படுவது வருமுன் காக்கும் உதவி. எப்போதும் எதிர்பார்த்து தப்பாமல் உதவும் அந்தக் கயிறு ஒரு பாட்டிவைத்திய முன்னோடி.

மருத்துவ பலன்
-----------------------------------
ஆடவர்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறையாக வந்திருக்கிறது என்பது இன்று பலருக்குத் தெரியாது. ஆடவர்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந் நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. பிறகு அக்கயிறு வெள்ளிக்கொடியாக மாறியது. இன்றைக்கு அநாகரீகம் எனக் கருதி அரைஞாண்கயிறும் கட்டுவதும் குறைந்து விட்டது.

உடல் பெருத்தலின் ஒரு அதிகபட்ச தீமை 'குடல் இறக்க நோய்' ஆங்கிலத்தில் ஹெரணியா என்பார்கள். இது தொண்ணூறு சதவீதம்
ஆண்களுக்குத் தான் வரும் என ஆய்வுக் குறிப்புகள் சொல்கின்றன . இதை தடுக்கத்தான் நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள்.


இப்போது வெள்ளி , தங்கத்தில் அறுணாக் கொடி கட்டுகிறார்கள் தான். அது பகட்டுக்கு. சில விடயங்கள் நாகரீக மாற்றங்களுக்குட்பட்டு மாறிவிட்டாலும் இன்றும் கறுப்புக் கயிற்றில் முத்து மணிகள் சில கோர்த்து அறுணாக் கொடி கட்டத் தான் செய்கிறார்கள்.

இந்த அரைஞாண் கொடியின் மகத்துவம் தெரியாமல் அதில் கண்ட கண்ட தாயத்துகளை கட்டி தொங்க விடுவதும், அது திருஷ்டி காக என்று புறம்பு கூறுவதும் தவறு....

நம் முன்னோர்கள் செய்த தவறு, தாங்கள் பின்பற்றிய முறைகளுக்கு உண்மையான உள் அர்த்தம் என்ன வென்று சொல்ல்மலேயே விட்டது ... அது தான் இந்த ஆரிய பூசாரிகளுக்கு வசதி ஆகிவிட்டது ... அவன் வந்து இந்த அரைஞான் கொடி தீட்டு அதை கழட்டி போட்டு விடு என்று சொன்னால் நம் தமிழர்கள் அதை உடனே கழட்டி போட்டு விட்டு தான் மறுவேலை பார்பார்கள் .. ஏன் என்றால் நம் பாரம்பரிய பெருமை தெரியாமல் , கல் சிலைக்கு தீபஆராதனை காட்டும் அவன் வார்த்தையே உண்மை என்று நம்பும் மனப்பக்குவம் தான்.

நம் முன்னோர்கள் நம் பெருமைகளை நமக்கு சொல்லி தந்ததை போல நம் பிள்ளைகளுக்கு நாமும் நம் பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்காமல் சிறு சிறு விடயங்களையும் அவர்களுக்கு சொல்லித்தர வேண்டும் 🥀🥀🥀🥀🥀

எழுதியவர் : உமாபாரதி (28-Dec-18, 10:53 am)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
பார்வை : 1430

சிறந்த கட்டுரைகள்

மேலே