தொலைந்து போன உன்னை தேடி
மெல்ல மெல்ல தட்டி
மனக்கதவை திறந்து
விட்டு
கண்ணாமூச்சி ஆட்டம்
ஆட
அங்கும் இங்கும் தேடி
ஆளைக் காணாது வாடி
மெல்ல மெல்ல சோர..,
உனக்குள்ளே நானிருக்க
உன் என்னமெல்லாம்
நிறைந்திருக்க
எங்எங்கோ தேடுகின்றாய்
என
என் உள்ளிருந்து சிரித்தபடி
மெல்ல மெல்ல தலை
தடவி
மடிமீது எனை கிடத்தி
உறங்க வைக்க
உறங்கிப் போனேன்
குழந்தையாய்
உறக்கத்தில் கை துழவ
வெற்றிடத்தில்
கை பரவ மடிகாணா
பதட்டத்தில்
தொலைந்த உறக்கம்
தொலைந்து போன
உன்னை தேட
கனவென்று தெரிந்தது
கனவுகூட நீயின்றி
எனக்கில்லை
என்பதுவும் புரிந்தது!