ஜாதி, மதம் இந்நாட்டில்

' நம் நாடு மத சார்பற்ற நாடு
நம் கொள்கைகளும் இதை சார்ந்ததே
ஜாதி இரண்டொழிய வேறில்லை'
என்றெல்லாம் நாட்டையாளும்
கட்சி தலைவர்களின் மேடைப்பேச்சு
நாட்டின் பொது தேர்தலுக்கு பின்னே
தேர்தலுக்கு முன்னே இவர்கள்
தத்தம் சமூகத்தை சேர்ந்தவரிடம்
ஜாதியைக்காட்டியே 'ஒட்டு' கேட்பார்
ஒட்டு வேடையாடுவார்; ஜாதி மத
அடிப்படை இல்லாமல் இந்நாட்டில்
இன்றும் வெற்றியடைவதென்பது
ஒரு முடியாத காரியம்தான் .........
இப்படி இருக்க இந்நாட்டை விட்டு
ஜாதிகள் வெளியேறுவது எப்போது
நான் அறியேனே பராபரமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Jan-19, 3:29 pm)
பார்வை : 47

மேலே