உள்ளமதி உன்னை வைத்தேன்..!

காகிதத்தில் வரைந்து விட்ட
என்
கற்பனையே..!

என்
கவிதை என
கதைக்கும்
கண்மணியே..!

உனை
விழிதனில்
பருகி!

வியப்பு
குறி
தரித்து!

உயிர் மூச்சினில்
கரைத்து..!

மனதினில்
மறைத்து..!

உயிர் வடிவம்
கொடுத்து..!

எழுத்துக்கள் என
வடித்து..!

உள்ளமதில் உன்னை
வைத்தேன்
என் எழுத்தே....!

எழுதியவர் : kavi's (27-Aug-11, 9:57 pm)
சேர்த்தது : kavitha kumaran
பார்வை : 366

மேலே