உழவர் திருநாள்

அறத்தினை விதையாய் விதைத்து

ஆழமுற உரமளித்து
இனியபல பயிர்கள் வளர்த்து
ஈற்றில்லா நீர்வளந்தொடுத்து
உழவை சீராய் செய்து
ஊனமறுத்த பயிர்களுக்கு வளங்கொடுத்து
எருதுக்கும் பங்களித்து
ஏர் பூட்டி உழுது
ஐவிரல் கலைத்திட உழைத்து
ஒழுகும் வீட்டிலே இருந்து
ஓடில்லா வீட்டுக்கும் பசியடைத்து
ஔடதமென உணவளித்து
உயிர்கொடுத்த உழவனுக்கு
கரங்கொடுத்து உயர்த்துவோம்...

எழுதியவர் : (18-Jan-19, 7:54 pm)
சேர்த்தது : மணி ராக்ஸ்
பார்வை : 873

மேலே