அழியாத கோலம்

ஆட்டம் பாட்டு ஆரவாரம்
தெருவில் குலசுவாமி ஊர்வலம்

அரை உறக்கத்தில் இருந்த என்னை
எழுப்பினாள் மனைவிக் கிழவி :

நம் வீதிப் பையன்கள் ஐந்து பேர் சளைக்காமல் ஆடுகிறார்கள்

மூக்குக் கண்ணாடியை
மாட்டிக் கொண்டு

சுவாமியை கைகூப்பி விட்டு
கூர்ந்து பார்த்து லயித்தேன் -

ஆடுபவர்கள் ஆறு பேர் .

எழுதியவர் : Dr A S KANDHAN (22-Jan-19, 12:31 am)
சேர்த்தது : Dr A S KANDHAN
Tanglish : aliyatha kolam
பார்வை : 74

மேலே