ஆயிரத்தில் நானும் ஒருவன்

போர்களமானது மனம் 

எண்ணங்களோ கடற்கரை நீராக முன்னும் பின்னும் சூழந்து 

வழி தவறிய பறவையாய் எங்கெங்கோ பறந்து

போதைக்கும், பதவிக்கும், சம்பளத்திற்கும், காமத்திற்கும் அடிமையாகி
கனவுகளையும், உறவையும், உணர்வையும், சுயத்தையும் இழந்து 


இந்த கணினி யுகத்தில்
நம் எதிர் காலம் என்னவாக போகிறது
என ஒவ்வொரு இரவையும்
ஒருவித பயத்துடன் தூங்க செல்லும்
ஆயிரத்தில் நானும் ஒருவன்

எழுதியவர் : கண்மணி (26-Jan-19, 8:33 pm)
சேர்த்தது : கண்மணி
பார்வை : 1011

மேலே