மரிக்கொழுந்தே

செக்கச் செவந்தவளே!
செவ்வந்திப் பூமகளே!
சேலையில மனசக் கட்டி
சேர்த்திழுத்துப் போனவளே!

சொக்கி விழ வச்சவளே!
சொக்கத் தங்க பேரழகே!
சோறு தண்ணி நான் மறக்க
காரணமா ஆனவளே!

நெனப்ப கெடுத்தவளே!
நேர் உச்சி எடுத்தவளே!
நேரம் காலம் பாக்காம
நெஞ்சுக்குள்ள புகுந்தவளே!

மனசுக்குள்ள நீ நொழஞ்சு
மாசம் நாலு ஆயிருச்சு!
மயிலு உன்னச் சேராம
மண்ட காஞ்சு போயிருச்சு!

காதல நான் சொல்லாம
காச்ச வந்து ஏறிடுச்சு!
காத்து கருப்பு அடிச்ச கணக்கா
கண்ணு ரெண்டும் மாறிடுச்சு!

இப்படியே போச்சுன்னா
இதயம் இத தாங்காது!
இழுத்துக் கட்டும் வேட்டி கூட
இடுப்புல இனி தங்காது!

சனிக்கிழம உனக்காக
சந்த பக்கம் காத்து நிப்பேன்!
சந்தனப் பொட்டு வச்சு வந்தா
சம்மதமுன்னு தெரிஞ்சுக்குவேன்!

மறக்காம வந்துருடி
மணக்குற என் மரிக்கொழுந்தே!
உனக்கும் என்ன புடிச்சிருந்தா
இந்த ஊருக்கெல்லாம் கறி விருந்தே!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (28-Jan-19, 8:36 pm)
சேர்த்தது : பார்த்திபன்
பார்வை : 149

மேலே