தமிழ்த்தாய் வாழ்த்து
தமிழ்த்தாய் வாழ்த்து
தாயே தமிழே தணியாச் சுடரே,
நீயே எங்கள் வாழ்வே வளமே!
ஓயா தென்றும் உன்புகழ் பாட
சேயென் நாவில் சேர்ந்திருப் பாயே !
அலையென மாற்றம் அடித்திடும் உலகில்
சிலையென மாறா இளமை வடிவில்
தலைமுறை ஆயிரம் தழைத்திடும் தமிழே
கலைகளும் எழுத்தும் காத்திடும் அமிழ்தே – நின்
சீரணிச் சிலம்புத் தாள்களில் பணிந்து
தாரணி யில்நின் தனிப்பெருஞ் சிறப்பை
ஓரணி நின்று ஓங்கிடச் செய்வோம்,
பூரணி ! நின்னருட் பூக்களைப் பொழிவாய் !
துரை தனபாலன்