தமிழ்த்தாய் வாழ்த்து

தமிழ்த்தாய் வாழ்த்து



தாயே தமிழே தணியாச் சுடரே,

நீயே எங்கள் வாழ்வே வளமே!



ஓயா தென்றும் உன்புகழ் பாட

சேயென் நாவில் சேர்ந்திருப் பாயே !


அலையென மாற்றம் அடித்திடும் உலகில்

சிலையென மாறா இளமை வடிவில்

தலைமுறை ஆயிரம் தழைத்திடும் தமிழே

கலைகளும் எழுத்தும் காத்திடும் அமிழ்தே – நின்



சீரணிச் சிலம்புத் தாள்களில் பணிந்து

தாரணி யில்நின் தனிப்பெருஞ் சிறப்பை

ஓரணி நின்று ஓங்கிடச் செய்வோம்,

பூரணி ! நின்னருட் பூக்களைப் பொழிவாய் !



துரை தனபாலன்

எழுதியவர் : துரை.தனபாலன் (2-Feb-19, 3:30 pm)
சேர்த்தது : துரைதனபாலன்
பார்வை : 1169

மேலே