ஊடலில் சுகிக்கும்

சும்மா கவிதை எழுதினேன் சுகமாய்
பா அமைப்பு இல்லை பழகு என்றார்

பா தனை எழுதிப் பார்த்தால் பாட்டில்
கவித்துவம் இல்லை கவனி என்றார்

குறட்பா எழுதினால் தாழிசை வந்தது
வெண்பா எழுதினால் அகவல் கலந்தது

இலக்கணம் கற்றால் இலக்கியம் மலருமா
இலக்கியம் படைத்தால் இலக்கணம் உதிருமா

எனக்கும் சிலருக்கும் எப்போதும் சந்தேகம்
கவிதையும் பாக்கள் இனமும் -

ஊடலில் சுகிக்கும் கணவன் மனைவியோ

எழுதியவர் : Dr A S KANDHAN (3-Feb-19, 12:59 am)
சேர்த்தது : Dr A S KANDHAN
பார்வை : 140

மேலே