காரணம்
மின்னலைப் போல்
ஒருவர் கண்களுக்கு
மற்றொருவர் தெரியாதவாறு
மிக வேகமாக
ஓடிக்கொண்டிருக்கின்றோம்...
எங்கு.??
மரணம் எனும்
தொடக்கத்தை நோக்கி...
வாழ்க்கை எனும்
முடிவிலிருந்து ஓடுகின்றோம்...
நம்மில் எத்தனைபேருக்குத் தெரியும்
நம் இறப்பின்
காரணம் தான் - நம்
வாழ்வின் அர்த்தமென்று...
இங்கு
காரணங்கள் தேடிப்பிடிக்கப்படுவதில்லை
உருவாக்கப்படுகின்றன...
வாழ்வின் கடமை
மரணத்தற்கான காரணத்தை
உருவாக்குவது...