வாழ்க்கை-தத்துவம்

எனது என்னுடையது
நாம் நமது என்றெல்லாம்
நாம் எதன்மீது ஆசை வைத்திருக்கிறோம்
இந்த 'நான்.'நமது' என்பவை
யாவுமே இல்லாததொன்று
அந்த 'நாமே' இல்லையென்றபோது
இதை அறிந்தும் அறியாததுபோல்
நாம் வாழ்வது நமதறியாமையே
இருந்தும் இந்த மாயவலையிலிருந்து
யார் நம்மை விடுவிப்பார் ........
நம் அகந்தை நீங்கிவிட்டால் நம்
அறியாமை நீங்கிவிடும் அறியாமை
நீங்க அப்பாதைத் தெரியுமே முன்னே.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Feb-19, 10:12 am)
பார்வை : 557

மேலே