போர் வீரன்

போர் வீரனே...

சுற்றம் மறந்து
சுகம் இழந்து
தன்னையறிந்து
போர் முனையில்
இன்னுயிரை இழக்கும்
மாவீரனே

வருவது அறிந்தும்
மரணத்தை
துணிந்து ஏற்கும்
நீ வீரனே

நீ இருக்கும்
நம்பிக்கையில்
மட்டுமே
நாங்கள்
சுற்றி திரிகிறோம்
சுதந்திரமாக

வீட்டுக்கு ஒருவர்
நாட்டுக்காக
உயிர்
காத்திட சட்டம்
வேண்டும்

அதிஷ்டகாரன் தான்
நீ
உன் இன்னுயிர்
ஈந்துவிட்டாய்
நாட்டுக்காக

வாய்ப்பிருந்தால்
நாங்களும்
உங்கள்
வரிசையில்

வீழ்ந்தது நீயாக
இருக்கலாம்
ஆனால்
நிமிர்ந்தது நாடல்லவா

நிம்மதியாக
உறக்கம்
கொள்
உன் இடத்தில் நாங்கள்
உள்ளோம்...

எழுதியவர் : (17-Feb-19, 6:50 pm)
சேர்த்தது : பசுபதி
Tanglish : por veeran
பார்வை : 563

மேலே