தொடரட்டும் அழகு

கடலில் அலைகள் ஓய்வதில்லை
காணும் அழகும் குறைவதில்லை,
உடையாய் உலகை மறைத்திருக்கும்
உவரி தனக்கும் வரும்கோபம்,
அடங்கி யிருக்கும் அலைக்கரத்தால்
அடித்தே நொறுக்கிடும் அகிலத்தையே,
தொடர்க கடலே உனதழகை
தொடர வேண்டாம் அவலங்களே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (18-Feb-19, 7:03 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 177

மேலே