மனித நேயம்



உலகம் உயிர் பெற
உணவு தந்தவன்
உயிரைத் தானே மாய்த்துக்கொள்ளும் சோகம்
இயற்கையை விற்றுவிட்டு
சுற்றுச்சூழலுக்காய்
குரல்தரும் மந்திரிகள் ...
உலகத்தை கிராமமாக்கி
மக்களை
பண்ணை அடிமைகளாய் மாற்றிய
நவீன ஜமீன்தார்கள் ...
புதைக்கப்பட்ட கன்னிவெடிகளில்
லட்சியதேவதைக்கு
உயிர்ப்பலியிடும்
தீவிரவாதிகள் !

ஜனநாயகப் போர்வையில்
வல்லரசுகளின்
சாவுப்பறை!

பிணக்குவியல்களின் மேல்
நின்றுகொண்டு
பிரகடணங்கள்....

பிரசங்கத்திற்கான
பொருளாய்போனது
மனிதநேயம் !

எழுதியவர் : (31-Aug-11, 7:33 pm)
பார்வை : 567

மேலே