மனிதனாக இரு
மனிதனாக இரு!
கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
கோவிலில்
கும்பிடும்போது
இந்துவாக இரு !
மசூதியில்
மண்டியிட்டு தொழுகும்போது
முஸ்லீமாக இரு !
தேவாலயத்தில்
ஜெபம் செய்யும்போது
கிறிஸ்துவனாக இரு !
மனிதர்களே….
பொது இடங்களில்
செயல்படும்போது
மனித நேயமிக்க
மனிதனாக இரு !
கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
வன்னியம்பட்டி , ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்