இதயத்தின் காதல்

பெண்னே!

உன்னை கண்டதும்
பறந்து சென்ற என் இதயம்
என்னை வந்து சேரவில்லை!

பறந்த என் இதயத்தை
தேடி சென்ற என் நிழலும்
இன்னும் வீடு வந்தபாடில்லை!

தேடி திரிந்த நிழலுக்கு
என் இதயம்
உன் வீட்டின் முன் இருப்பதாக
ஒரு தகவல் கிடைத்து..
என் உடலும்,நிழலும்
அங்கு சென்று இதயத்தை
கையும் காலுமாய் பிடித்து..
என்னுடன் வா என்று அடித்து..
தர தர வென்று இழுத்தும்..
அவன் நான் வரமாட்டேன் என்று
கண்ணீர் வடித்து
கதறி அழுகின்றான்!!!

கல்நெஞ்சக்காரி!

என் இதயத்தின் அழுகுரல்
உன் செவிகளில் விழுந்தும்
மெளனம் கொள்வது ஏனடி!!!

என் இதயம் சிந்தும்
உதிரம் பார்த்தும்
உன் கண்களில்
காதல் வரவில்லை ஏனடி!!

அன்பே வெளியே வா!

உன்னை காண
துடித்து கொண்டிருக்கும்
என் இதயத்தை
உன் கையால் எடுத்து..
மார்போடு அணைத்து..
உன் மனதோடு இணைத்து
காதல் கொள் கண்ணே!!!

இரு மனம் ஒருசேர்ந்து
என்னுயிர் சேருமென எதிர்பார்பவனாக,

❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (2-Mar-19, 7:30 pm)
பார்வை : 4828

மேலே