நிலவு

நித்திரா தேவியின்
இவ் ஆட்சியின்
நிலமகளாய் வந்தவளே
நிலம் பார்த்தவளே
நீட்டிய கரங்களின்
ஒளி சிதறலின்
முதல் பிரதிபலிப்பாய்..
கள்வனின் காதலியாய்..
காணா முகம் கண்டு
உடல் சிறுக்க கண்டு..
உடல் பெருக்கண்டு..
நிர் மூலமான
வானமதில் வாசமான
வான் நிலவே..
என்றுதான் இணைவாயோ..
உன் காதலனான... கதிரவனுடன்...?

எழுதியவர் : சா.மனுவேந்தன் (10-Mar-19, 6:10 pm)
சேர்த்தது : மனுவேந்தன்
Tanglish : nilavu
பார்வை : 309

மேலே