அந்நியர்களின் ஆசை

கடவுள் செய்த பிழையின் ஆதாரம் நாங்கள்
ஏங்கும் கனவுகளை ஊனமாக்கிய கயவர்கள் நாங்கள்
சிறகுகள் இருந்தும் அண்ட இடமின்றி அல்லாடும் காத்தாடி நாங்கள்
விடாது அழுத விழிக்கு ஓய்வு கேட்கும் பாவங்கள் நாங்கள்

பெற்றேடுத்த தாய் தந்தை இருந்தும்
வளர்த்த மக்கள் இருந்தும்
பல்லாயிரம் நல்ல உள்ளங்கள் இருந்தும்
எங்களுக்கு முகவரி தந்தது அனாதை இல்லம் மட்டுமே

நிலத்தடி நீர் போல் எங்களின் கண்ணீரும் வற்ற
இந்த பிறப்பை மனம் வெறுத்து மரணம் வேண்டும்
என தினம் ஏங்கும் பலகோடி உயிர்களில்
நாங்களும் ஒருவர் நல்லவர்களே

எழுதியவர் : Kanmani (11-Mar-19, 1:17 pm)
சேர்த்தது : கண்மணி
பார்வை : 359

மேலே